வெயில் அதிகரிக்கும்; வீட்டைவிட்டு வெளியே வராதீங்க: எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்!

வெப்பம்
வெப்பம்வெயில் அதிகரிக்கும்; வீட்டைவிட்டு வெளியே வராதீங்க: எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்பதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம்.

அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு மயக்கம் உள்பட பல்வேறு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in