விளையாட்டு விபரீதமானது: மூன்று வயது சிறுமி உயிரைப்பறித்த சால்வை

விளையாட்டு விபரீதமானது:  மூன்று வயது சிறுமி உயிரைப்பறித்த சால்வை

விளையாடிக் கொண்டிருந்த போது சால்வை கழுத்தில் இறுக்கி மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மெட்டூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 7 வயதில் யுகந்திகா என்ற மகளும், 3 வயதில் மகனும் இருந்தனர். அப்பகுதியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் யுகந்திகா மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் நேற்று இரவு வீட்டில் சால்வையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் கம்பியில் சால்வையின் ஒரு பகுதியை கட்டி விட்டு மற்றொரு பகுதியைக் கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சால்வைத்துணி யுகந்திகாவின் கழுத்தை இறுக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

விளையாட்டிக்கொண்டிருந்த குழந்தை மயங்கி விழுந்ததைப் பார்த்த அவரின் பெற்றோர், உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே யுகந்திகா உயிரிழந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு விபரீதமாகி சிறுமியின் உயிரைப்பறித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in