குடித்து விட்டு வந்து தாய்க்குத் தொல்லை கொடுத்த அப்பா: பிளான் செய்து கொலை செய்த மகன்கள்

கொலை
கொலை

தினமும் இரவு குடித்துவிட்டு வந்து தன் மனைவியை சந்தேகப்பட்டுத் தாக்கிவந்த தந்தையை மகன்கள் சேர்ந்து கொடூரமாக அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவர் நெல் சாகுபடி செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் முடிந்து இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் தீராத குடிப்பழக்கத்திற்கு ஆளான குருசாமி, தினமும் குடித்துவிட்டு வந்து தன் மனைவியிடம் தகராறு செய்துவந்தார். அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைத் தாக்கியும் வந்தார்.

இதனால் அவரது மகன்கள் ராஜேந்திரன்(23), ராம்குமார் இருவரும் குருசாமி மீது கடுங் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவும் குருசாமி தகராறில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன், ராம்குமார் இருவருமே தங்கள் தந்தையைக் கொலை செய்யும் முடிவுக்கு வந்தனர். இதில் ராம்குமார் தூண்டுதலில் ராஜேந்திரன் முதலில் தன் தந்தையைக் கட்டையால் அடித்தார். தொடர்ந்து அவரது கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார். இதில் குருசாமி துடி, துடித்து உயிரிழந்தார். கொலை செய்த கையோடு ராஜேந்திரன் போலீஸிலும் சரண் அடைந்துவிட்டார். ஆனால் கொலை செய்யத் தூண்டிய மற்றொரு மகனான ராம்குமார் தலைமறைவாகிவிட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in