
டில்லியில் நடைபெற்ற குடியரசுத் தின அலங்கார அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த ஊர்தியில் வ.உ.சி தொடங்கி, வாஞ்சிநாதன் வரை தமிழகத்தைச் சேர்ந்த பல சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களும் இருந்தன. மத்திய அரசு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை லாவகமாகப் பிடித்துக்கொண்ட தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த ஊர்தியை அனுப்பிவைத்தது.
தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை மத்திய அரசு கொச்சைப்படுத்திவிட்டதாக அப்போது ஆக்ரோஷப்பட்டது திமுக. இந்த நிலையில், வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமானவரும், வீர வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான ஆஷ் துரையின் மணிமண்டபத்தை புனரமைக்க தூத்துக்குடி மாநகராட்சி தீவிரம்காட்டி வருவது திமுக அரசை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.