பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது: பதறிய கேரள முதியவர்!

பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது: பதறிய கேரள முதியவர்!
பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது: பதறிய கேரள முதியவர்!

கேரளாவில் டீக்கடையில் டீ குடிக்கச் சென்ற முதியவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் மரோட்டிச்சால் பகுதியில் டீ கடை ஒன்று உள்ளது. இங்கு எலியாஸ்(76) என்பவர் டீ குடிக்க வந்தார். அவர் டீ போடும் மாஸ்டரிடம் டீ சொல்லிவிட்டு அப்பகுதியில் உள்ள சேரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது.

என்ன நடக்கிறது எனத் தெரியாத எலியாஸ் பதறிப்போய் எழவே, அவர் பாக்கெட்டில் இருந்து எரிந்துகொண்டிருந்த நிலையில் செல்போன் கீழே விழுந்தது. அவரது சட்டையிலும் தீப்பற்றியது. அவர் உள்ளே பனியனும் போட்டிருந்ததால் மார்புப் பகுதியில் பெரிய அளவில் தீக்காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து எலியாஸ் கூறுகையில், தான் பேசிக் மாடல் போன் தான் வைத்திருந்ததாகவும், அதை வெறும் ஆயிரம் ரூபாய்க்குத்தான் வாங்கியதாகவும் அதனால் அதற்கு வாரண்டியும் இல்லை என்றும் கூறினார்.

பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி எலியாஸ் தப்பினாலும், கேரளத்தில் அண்மையில் தான் திருச்சூர் பட்டிப்பறம்பு பகுதியில் அசோக் என்பவரின் மகள் ஆதித்ய ஸ்ரீ சேல்போனில் கேம் விளையாடிய போது திடீரென செல்போன் வெடித்து மரணம் அடைந்திருந்திருந்தார். எலியாஸ் சம்பவம் இரண்டாவது செல்போன் வெடிப்புச் சம்பவம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in