கோடையைச் சமாளிக்க தண்ணீர் தேவை.... காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மே 21-ல் கூடுகிறது!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் மே 21-ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

காவிரி
காவிரி

இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் மே 21-ம் தேதி 30வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடைகால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in