விஷச்சாராயத்தால் பறிபோன 22 உயிர்கள்: மெத்தனால் விற்பனையாளர்கள் மீது கொலை வழக்குப்பதிவு

விஷச்சாராயத்தால் பறிபோன 22 உயிர்கள்: மெத்தனால் விற்பனையாளர்கள் மீது
கொலை வழக்குப்பதிவு
விஷச்சாராயத்தால் பறிபோன 22 உயிர்கள்: மெத்தனால் விற்பனையாளர்கள் மீது கொலை வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்துள்ள  நிலையில்  அதற்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்தவர்கள் மீதான வழக்குகள்  கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உயிர் பலிக்கு காரணம், மெத்தனால் என்பதும்,  கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை சாராய வியாபாரிகள் வாங்கிப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 13.05.2023 அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 நபர்களும், செங்கல்பட்டில் 8 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஜெய சக்தி பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும், மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷச்சாராயம் சென்னை வானகரம் ஜெய சக்தி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018-ம் ஆண்டு வாங்கி, பின்னர் கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போனதாலும், இவர்களது தொழிற்சாலை திவாலான நிலையில் 1200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த பரக்கத்துல்லா (எ) ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66,000க்கு விற்பனை செய்துள்ளார்.

இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது. மேலும், விஷச்சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷச்சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இவர் 400 லிட்டர் விஷச்சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டியிருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மது விலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 1200 லிட்டர் விஷச்சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர். மீதமிருந்த 1,192 லிட்டரை 48 மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து காவல்துறையினர் விரைந்து கைப்பற்றினர்.

இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை, விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களிலுள்ள வழக்குகளை கொலை வழக்காக (302 IPC) மாற்றம் செய்யப்படுகிறது என்று சைலேந்திரபாபுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநிலத்தில் உள்ள  11 மெத்தனால் உற்பத்தி ஆலைகள் மற்றும் 71 மெத்தனால் பயன்படுத்தும் ஆலைகளில்  ஆய்வு செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in