பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை

பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023மத்திய பட்ஜெட் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று காலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளாா். அவா் தாக்கல் செய்யும் 5-வது நிதிநிலை அறிக்கையாகும்.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக புதிய வரிவிதிப்புகள் இருக்காது, மாதச் சம்பளதாரர்களுக்கு வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வருமானவரி விலக்கு வரம்பு இரண்டரை லட்ச ரூபாயாக இருப்பதை 5 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின் படி வரிவிலக்கு சலுகை என்பது பல வருடங்களாக தொடர்ந்து ஒன்றரை லட்ச ரூபாயாகவே உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் புதிய வேலைவாய்ப்புகள், முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in