நாயைப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: சிசிடிவியை வைத்து தேடும் போலீஸ்

பாட்னாவில்  நாய் பலாத்காரம் செய்தவரை போலீஸ் தேடுகிறது
பாட்னாவில் நாய் பலாத்காரம் செய்தவரை போலீஸ் தேடுகிறதுநாயைப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: சிசிடிவியை வைத்து தேடும் போலீஸ்

பீகாரில் தெருநாயைப் பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப்பில் பைசல் காலனி உள்ளது. இங்கு மார்ச் 8-ம் தேதி தெருநாயை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த தொண்டு நிறுவனம் காவல் துறையில் நேற்று புகார் செய்தது.

சிசிடிவி காட்சிகளை வைத்து அவர் நாயைப் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதுதொடர்பாக புல்வாரி ஷெரீப் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து விலங்குகளுக்கு எதிரான கொடுமையின் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாட்னாவின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in