மணப்பந்தலில் உயிரிழந்த மணமகன்; அதிர்ச்சியில் மயங்கிய மணமகள்: கண்கலங்க வைத்த சம்பவம்!

வீனித், ஆயுஷி.
வீனித், ஆயுஷி.மணப்பந்தலில் உயிரிழந்த மணமகன்; அதிர்ச்சியில் மயங்கிய மணமகள்: கண்கலங்க வைத்த சம்பவம்!

திருமணம் நடைபெற்ற அடுத்த நாள், சிந்தூர் இடும் நிகழ்ச்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்ட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் பகுதியைச் சேர்ந்த வினீத். இவர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். பீகார் மாநிலம், பாகல்பூரில் வசிக்கும் ஆயுஷி . இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந் து வருகிறார். வினீத்தும், ஆயுஷிம் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் மே 3-ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இவர்களது திருமணம் நீட் நகரின் ஷிட்லா ஸ்மானில் உள்ள மிர்ஜன்ஹாட் சவுக்கில் அமைந்துள்ள மாதேஸ்வரி திருமண மண்டபத்தில் மே 3-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஃபோட்டோ செஷன் உள்ளிட்ட சடங்குகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக சிந்தூர் தானம்(குங்குமம் இடும்) நிகழ்ச்சி மே 4-ம் தேதி காலை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சுமார் 8 மணியளவில் மணமக்கள் மற்றும் பிற நபர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் மணமகன் வினீத்துக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக வினீத்தை மயங்க்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வினீத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் ஆயுஷி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வினீத் குடும்பத்தினர் கூறுகையில்," கடந்த 2 -ம் தேதி வினீத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது அவர் மாத்திரயைச் சாப்பிட்டதால் வலி சரியாகி விட்டது. இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார்" என்றனர். இந்த சோகச்செய்தி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் நடைபெற்ற ஒரே நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in