இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பிளம்பர்: விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பிளம்பர்: விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண், வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது அந்த குளியலறையின் அருகில் இருந்த வாலிபர் ஓடுவதைப் பார்த்தனர். அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், காளம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in