பள்ளியில் சேர்ந்த 3 மாதத்தில் உயிரிழந்த ஆசிரியை: லிப்டில் நடந்த பயங்கரம்

பள்ளியில் சேர்ந்த 3 மாதத்தில் உயிரிழந்த ஆசிரியை: லிப்டில் நடந்த பயங்கரம்

மும்பையில் தனியார் பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை நகரின் மலாட் மேற்கு பகுதியில் தனியார் ஆங்கிலப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜூலை மாதம் முதல் ஜெனியல் பெர்னாண்டஸ் ( 26) என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை வகுப்பை முடித்துவிட்டு லிப்டில் 2-வது மாடியில் உள்ள பணியாளர்கள் அறைக்கு ஜெனியல் சென்ற அவர், 6-வது மாடியில் லிப்டிற்குச் சென்றார். அப்போது திடீரென லிப்ட் மேலே சென்றுள்ளது. இதில் ஆசிரியை ஜெனியல் லிப்டிற்கும், 6-வது மாடிக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.

அப்போது, லிப்ட் வேகமாக மேலே சென்றதில் லிப்டிற்கும், சுவருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டார். இதில், ஆசிரியை ஜெனியல் படுகாயமடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியைகள் லிப்டில் சிக்கிய ஜெனியலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ஜெனியலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி லிப்டில் சிக்கி உடல் நசுங்கி ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in