பள்ளி மாணவிகள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் தலைமறைவு

பள்ளி மாணவிகள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் தலைமறைவு

மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துத் தலைமறைவான அரசுப் பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அது தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பள்ளிக்கு வராமல் தலைமறைவாகி விட்டார்.

மேலும் முகமது அசாருதீன் தன்னிடம் டியூஷன் படிக்க வரும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கரடகி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் முகமது அசாருதீனைத் தேடி வருகிறார்கள்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in