இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அலர்ட்

நான்கு நாட்களுக்கு மழை
நான்கு நாட்களுக்கு மழைஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அலர்ட்

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா, அதனையொட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11-ம் தேதியன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 12-ம் தேதி அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிககளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in