புதுவையில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுவையில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா, டெங்கு, ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதால் மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்தது.

இதனால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து காய்ச்சல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். இதில் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். புதுவையில் பன்றிக் காய்ச்சல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in