சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் என்ன?

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் என்ன?

அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் காபூலில் திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக 2 வஜ்ரா வாகனங்களை முன்னிறுத்தி 40-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே செல்லும் ஜெமினி மேம்பாலம் மேலே உள்ள 4 பாதுகாப்பு போஸ்டுகளில் 4 ஆயுதப்படை போலீஸார் வீதம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாத இயக்கத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in