வீட்டில் இறந்துகிடந்த கர்ப்பிணி மனைவி: வேலை முடிந்து வீடு திரும்பிய காதல் கணவன் அதிர்ச்சி

வீட்டில் இறந்துகிடந்த கர்ப்பிணி மனைவி: வேலை முடிந்து வீடு திரும்பிய காதல் கணவன் அதிர்ச்சி

தென்காசி மாவட்டம், அச்சன்புதூரில் வீட்டில் தனிமையில் இருந்த ஆறுமாத கர்ப்பிணி பெண் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பண்ணை வீட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். லோடு மேனாக உள்ளார். இவரை முகிலா(19) என்ற பெண் காதலித்து வந்தார். முகிலா அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்துவந்தார். இந்தக் காதலில் முகிலா கர்ப்பமும் ஆனார். இதுகுறித்து முகிலாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தந்தை மூக்காண்டி, மகள் முகிலாவை அவரது காதலர் பாஸ்கரனின் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். பாஸ்கரனின் பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் திருமணத்தை நடத்திவைத்தனர்.

பாஸ்கரன் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார் முகிலா. உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இதுகுறித்து கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in