சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை: மற்றொருவர் அட்மிட்

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை: மற்றொருவர் அட்மிட்

சென்னை ஐஐடியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்ததில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை ஐஐடியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பட் என்ற மாணவர் முதுநிலை ஆராய்ச்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் விடுதி அறையில் ஸ்டீபன் சன்னி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த சில தினங்களாக படிப்பு தொடர்பாக அதிக மனஉளைச்சலில் மாணவர் இருந்தாக சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல மற்றொரு மாணவரும் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, உயிருக்கு போராடிய நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இன்னும் சில தினங்களில் இறுதித் தேர்வுத் தொடர்பாக இருவரும் அதிக மன உளைச்சலில் இருத்தாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in