`புகார் வருகிறது; லஞ்சம் வாங்கினால் இதுதான் நடக்கும்’- ஊழியர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை!

மின்சார வாரியம்
மின்சார வாரியம்

சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார வாரியம் சுற்றறிக்கை
மின்சார வாரியம் சுற்றறிக்கை

இதுத் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சேவை இணைப்புகளை வழங்க அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் கோருவதும் வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்

இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in