கடைசி மூச்சு போகும் வரை கழுத்தை நெரித்தேன்: 8 வயது சிறுமியைக்கொன்ற சித்தி அதிர்ச்சி வாக்குமூலம்

8 வயது சிறுமியைக் கொன்ற சித்தி கைது
8 வயது சிறுமியைக் கொன்ற சித்தி கைதுகடைசி மூச்சு போகும் வரை கழுத்தை நெரித்தேன்: 8 வயது சிறுமியைக்கொன்ற சித்தி அதிர்ச்சி வாக்குமூலம்

மேற்கு வங்க மாநிலத்தில் மனநலம் குன்றிய 8 வயது சிறுமியின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்த சித்தியை போலீஸார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம், முர்ஷிதபாத்தில் உள்ள சச்சந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பஸ்சிந்திர அலாவுதீன் ஷேக். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை இருந்தது. மனநலம் குன்றிய இந்த சிறுமிக்காக கடந்த ஆண்டு லால்மோன் பீபி(30) என்ற பெண்ணை ஷேக் இரண்டாவது திருமணம் செய்தார்.

இந்நிலையில், மனநலம் குன்றிய குழந்தையைக் கவனிப்பதில் லால்மோன் பீபி, அக்கறை காட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கும், ஷேக்கிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பஸ்சிந்திர அலாவுதீன் ஷேக் நேற்று வேலைக்குச் சென்று விட்டார். இரவு ஷேக் வீட்டின் அருகே அவரது 8 வயது மகள் உடல் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் பார்த்த போது, குழந்தையின் உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. இதையடுத்து , குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜாங்கிபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லால்மோன் பீபியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, எட்டு வயது குழந்தையைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

குழந்தையின் கடைசி மூச்சு போகும் வரை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறிய லால்மோன் பீவி, முதலில் சிறுமியின் உடலில் கத்தியால் பல இடங்களில் குத்தியதாக கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரை கைது செய்த போலீஸார், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in