அதிர்ச்சி... 24 மணி நேரத்தில் 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

அதிர்ச்சி... 24 மணி நேரத்தில் 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைபிடித்தது. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 23 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 14 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை 24 மணி நேரத்தில் சிறைபிடித்துச் சென்றது. இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 37 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

இந்திய மீனவர்களின் படகுகள்
இந்திய மீனவர்களின் படகுகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in