80 வயது தாயைக் கொன்று புதைத்த மகன்: சுமையாக இருந்ததாக பரபரப்பு வாக்குமூலம்

தாயைக் கொன்ற மகன் கைது
தாயைக் கொன்ற மகன் கைது80 வயது தாயைக் கொன்று புதைத்த மகன்: சுமையாக இருந்ததாக பரபரப்பு வாக்குமூலம்

சுமை எனக்கருதியதால் 80 வயது தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலைப் புதைத்த அவரது மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள் கமரெட்டி மாவட்டம் சதாசிவ் நகரைச் சேர்ந்தவர் பாலய்யா. இவர், தனது தாயான பாலவ்வா(80) என்பவருடன் வசித்து வந்தார். நோய் வாய்ப்பட்ட பாலவ்வா படுத்த படுக்கையாக கிடந்தார். இந்த நிலையில், சில நாட்களாக அவர் வீட்டில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் பாலய்யாவிடம் அவரது தாய் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் படுத்திருந்த அறையும் பூட்டப்பட்டுக் கிடந்தது. இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து மண்டல் பரிஷத் பிராந்தியக்குழு உறுப்பினரான பீராயாவிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்தார். இதனால் பாலய்யாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது தாயைக் கொன்று புதைத்து விட்டதாக அவர் சொன்னதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

நோய் வாய்பட்ட தாயைக் கவனிக்க முடியவில்லை என்றும், சுமையாக இருந்ததால் ஏப். 13-ம் தேதி அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அருகில் உள்ள அரிசி ஆலைக்குப் பின் உள்ள வெற்றிடத்தில் புதைத்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து அவர் கூறிய இடத்தை போலீஸார், தோண்டிப் பார்த்தனர். அப்போது பாலவ்வாவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பாலய்யாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகனே கொலை செய்து புதைத்த சம்பவம் கமரெட்டி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in