கண்டம், துண்டமாக தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்: சொத்துத் தகராறில் நடந்த பயங்கரம்

சொத்துக்காக தந்தையைக் கொலை செய்த மகன் கைது
சொத்துக்காக தந்தையைக் கொலை செய்த மகன் கைதுகண்டம், துண்டமாக தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்: சொத்துத் தகராறில் நடந்த பயங்கரம்

சொத்துத் தகராறில் தனது தந்தையைச் சுத்தியால் அடித்துக் கொன்று உடலை துண்டு துண்டாகி வெட்டி சூட்கேஸில் அடைத்த மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள சூரஜ்குந்த் காலனியைச் சேர்ந்தவர் முரளிதர் குப்தா(62). இவரது மகன் சந்தோஷ்குமார் குப்தா(30). இவருக்கும், இவரது தந்தைக்கும் சொத்துத் தகராறு இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் முரளிதர் குப்தா தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சந்தோஷ்குமார் குப்தாவிற்கும் அவரது தந்தைக்கும் சொத்து தகராறு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், சுத்தியலால் அவரது தந்தையைச் சரமாரியாகத் தாக்கினார். இதில் முரளிதர் குப்தா உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீட்டின் பின்புறம் உள்ள சாலையில் சந்தோஷ்குமார் வீசியுள்ளார்.

இந்த நிலையில், வீட்டிற்கு வந்த முரளிதர் குப்தாவின் சகோதரர் பிரசாந்த் குப்தா, வீடு முழுவதும் ரத்தக்கறையாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாக திவாரிப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்.பி கிருஷ்ணகுமார் பிஷ்னோய் உள்பட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது. சொத்து தகராறில் சந்தோஷ்குமார் தனது தந்தையைக் கொன்றாக கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், முரளிதர் குப்தாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. சொத்துக்காக தந்தையை மகனே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் கோரக்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in