காரில் கடத்தப்பட்ட 500 போதை ஊசிகள் பறிமுதல்: கபடி வீரர் கைது

போதை ஊசிகளுடன் கைது செய்யப்பட்ட அஜய்.
போதை ஊசிகளுடன் கைது செய்யப்பட்ட அஜய்.காரில் கடத்தப்பட்ட 500 போதை ஊசிகள் பறிமுதல்: கபடி வீரர் கைது

கபடி வீரர்களுக்கு சப்ளை செய்வதற்காக காரில் கடத்தப்பட்ட 500 போதை ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கபடி வீரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணாவின் ஹான்சி மாவட்டத்தில் போதை ஊசிகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜக்காபடா பாலம் அருகே போலீஸார் ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த அஜய் என்ற கபடி வீரரிடம் 500 ஸ்டீராய்டு ஊசிகள் கைப்பற்றப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், அமிர்தசரஸில் நடக்கும் கபடி போட்டியில் வீரர்களுக்கு இந்த ஊசிகளை சப்ளை செய்ய அஜய் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், இவ்வளவு ஊசி கபடி வீரருக்கு எப்படி கிடைத்து, யார் இவருக்குச் சப்ளை செய்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் கைதான அஜயிடம் இருந்து தடை செய்யப்பட்ட சுமார் 200 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர் . இந்த சம்பவம் ஹரியாணாவில் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in