சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்!

ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி கும்பாபிஷேகம்
ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி கும்பாபிஷேகம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோயிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம்  வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்!

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர், உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3நிலைகளில் காட்சி தருகின்றனர். 

திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய சிறப்பு பெற்ற ஸ்தலம் இதுவாகும். காசிக்கு அடுத்தப்படியாக  அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். 

பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்று முடிந்தது.

தமிழிசை  சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது

முத்துசட்டைநாதர்சுவாமி, திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம், கருங்கல் பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல், வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து கடந்த சனிக்கிழமை 8கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று,   11பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.  இன்று நான்கு கோபுரங்கள், சுவாமி, அம்மன் விமான கலசங்கள், மலைக்கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம்  முன்னிலையில் நடைபெற்ற  கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பல்வேறு மடத்து ஆதீனங்கள்,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தர்ராஜன் , அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டதுடன்  புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ்.பி நிஷா தலைமையில் பல்வேறு மாவட்ட எஸ்.பிக்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in