ரெய்டு நடந்த தொழிற்சாலையில் திடீர் தீ: 5 கோடி தோல், காலணிகள் எரிந்து நாசம்

ரெய்டு நடந்த தொழிற்சாலையில் திடீர்  தீ:  5 கோடி தோல், காலணிகள் எரிந்து நாசம்

ஆம்பூர் பகுதியில் உள்ள ஃபரிதா காலணி தொழிற்சாலையில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று இரவு மர்மமான முறையில் அந்த தொழிற்சாலை தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ளது ஃபரிதா காலணி தொழிற்சாலை. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தொழிற்சாலையிலிருந்து காலணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் குடோனில் தீப்பற்றி இருக்கிறது. பிறகு தொழிற்சாலை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டெறிந்துள்ளது. இதையடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 5 கோடி மதிப்பிலான காலணி மற்றும் தோல் உதிரிப்பாகங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட ஃபரிதா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in