அதிர்ச்சி... கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது! திருப்பதியில் அலறும் பக்தர்கள்!

சிறுத்தை நடமாட்டம்
சிறுத்தை நடமாட்டம்
Updated on
1 min read

திருப்பதி மலைப்பாதையில், சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினரால் வைக்கப்பட்டிருந்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. கடந்த 50 நாட்களில் அடுத்தடுத்து 3 சிறுத்தைகள் பிடிப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 6 வயது லட்ஷிதா என்ற சிறுமி மலைப்பாதையில் கடந்த 11ம்தேதி தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த போது சிறுத்தை தாக்கியதில் இறந்தார். இதனையடுத்து திருப்பதி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த தேவஸ்தான நிர்வாகம், சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தது.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. தற்போது அதே பகுதிக்கு அருகே வைத்திருந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியது. கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகளை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராபேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது.

அடுத்ததாக சிக்கிய சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என கருதப்படுவதால் அவற்றின் ரத்தம், நகம், முடி உள்ளிட்டவை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான தடயம் இருந்தால் அந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள வன விலங்குகள் அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3 வதாக சிக்கிய சிறுத்தைக்கும் மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in