`முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன்'- ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் புகழாரம்

 ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர்
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் `முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன்'- ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் புகழாரம்

"முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்" என ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு புகழாரம் சூட்டினார்.

ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவை அனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார். அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார். அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார்.

ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார். அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹா சிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன காலத்தின் போற்றத்தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மிக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். குறிப்பாக ஏராளமான இளைஞர்களை ஆன்மிக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார்.

அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மிகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த மஹா சிவராத்திரி நன்நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும்" என்றார்.

குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in