தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கர்ப்பமாக்கிய அண்ணன் எஸ்கேப்

தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கர்ப்பமாக்கிய அண்ணன் எஸ்கேப்

வேலூரில் பள்ளி பயிலும் சிறுமியை அவரின் அண்ணனே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அந்த சிறுமியும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகி இருக்கிறாள். திடீரென அவருக்கு உடல் நல் குறைவு ஏற்பட்ட காரணத்தால், அவரின் பெற்றோர்கள் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமிக்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மகளிர் காவலர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். உடன் பிறந்த அண்ணனே அந்த சிறுமியைப் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in