விருதுநகரில் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து திருவில்லிபுத்துார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெகஜோதிமணி. கடந்த ஆண்டு தனது சொந்த மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவல் அடிப்படையில், விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜெகஜோதிமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளியான ஜெகஜோதிமணிக்கு (42) வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.