பட்ஜெட்டில் சேதுக் கால்வாய் திட்டம் அறிவிப்பு இல்லாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றம்'

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம்
பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்பட்ஜெட்டில் சேதுக் கால்வாய் திட்டம் அறிவிப்பு இல்லாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றம்'

`மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரி கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' என ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனி நபர் வருமான வரி வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆண்டுக்கு 7 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் நிறுவ உத்தேசம், விவசாயத் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தனி நிதி ஒதுக்கீடு , மீன் வளத்துறையை மேம்படுத்த ரூ.6,000 கோடி ஒதுக்கீடு, ரயில்வே போக்குவரத்து மேம்பாட்டுக்கென ரூ.2.40 லட்சம் கோடி அறிவிப்பு, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு பாராட்ட தகுந்த அம்சங்களாகும்.

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன்

மின்சார வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைப்பை வரவேற்கிறோம். அரசின் மிகப்பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்த 50 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது சிறப்பான அம்சம்.

இப்படி பல நல் அம்சங்களை கொண்ட மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த சேது கால்வாய் திட்டம் பற்றி ஒரு வரிகூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in