'சீரியல் கிஸ்ஸர்' - தெருக்களில் நடந்து செல்லும் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த நபர் கைது

கைது
கைது'சீரியல் கிஸ்ஸர்' - தெருக்களில் நடந்து செல்லும் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த நபர் கைது

பீகாரில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களுக்கு தொடர்ந்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தப்பிச் சென்ற 'சீரியல் கிஸ்ஸர்' நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், ஒரு பெண்ணை, ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலானது. மார்ச் 10 அன்று ஜாமுயில் உள்ள சதார் மருத்துவமனையில் நான்காம் வகுப்பு சுகாதாரப் பணியாளர் ஒருவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென அங்கே வந்த நபர், அப்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடினார். இதுபோல கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த

சில நாட்களுக்குப் பிறகு, சம்பவத்தின் பின்னணியில் உள்ள முகமது அக்ரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பல்வேறு பாலியல் வன்கொடுமை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் அக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்ரம் பதுங்கியிருந்த இடம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி, நான்கு கூட்டாளிகளுடன் அவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in