திடீரென உயர்த்தப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திடீரென உயர்த்தப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாகப் புழல் ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக அந்த ஏரிகள் நிரம்பியதால், கடந்த 2-ம் தேதி மதியம் புழல் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து  100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு சுமார் 1,800 கன அடி அளவிற்குத் தண்ணீர் வந்த நிலையில், தற்போது 400 கன அடி அளவிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21 அடி அளவிற்குத் தண்ணீர் உள்ளது. அடுத்த சில தினங்களில் வடகிழக்கு பருவமழையில் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  இன்று காலை 10 மணியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின்  சுற்றுவட்டாரப்  பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in