விரைவில் களத்தில் சந்திப்போம்: ரிஷப் பண்ட் ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

விரைவில் களத்தில் சந்திப்போம்: ரிஷப் பண்ட்  ட்விட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

கார் விபத்தில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், விரைவில் களத்தில் சந்திப்போம் என்று ட்விட் செய்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்டின் இடம் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், ஒருநாள், ஐபிஎல், டெஸ்ட் போட்டி என மூன்று ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பண்ட் ட்விட் செய்துள்ளார்.

அந்த பதிவில், " எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நான் குணம் அடைந்து வருகிறேன். எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிசிசிஐ, ஜெய் ஷா, அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்களுக்கும் நன்றி. உங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தின. விரைவில் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். அவரின் இந்த ட்விட்டால் ரிஷப் பண்டின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in