சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: கோடை விடுமுறை நீட்டிப்பு

கோடைவிடுமுறை நீட்டிப்பு
கோடைவிடுமுறை நீட்டிப்புசுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: கோடை விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ஜூன் 7-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில்மகேஷ்
அமைச்சர் அன்பில்மகேஷ் சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: கோடை விடுமுறை நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் நூறு டிகிரியைத் தாண்டி இருப்பதாகவும், வெப்பத்தின் அளவு கூடிவருவதாகவும், எனவே, பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வெயில் சுட்டெரிப்பதால், தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து ஜூன் 5 அல்லது 7 ஆகிய இரு தேதிகளில் ஏதாவது ஒன்றில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in