தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை:  திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதால், விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in