`இனி பாடத்திட்டம், பணிப் பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’-பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!

`இனி பாடத்திட்டம், பணிப் பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை’-பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!

ஆசிரியர்கள் பாடத்திட்டம், பணிப்பதிவேடு உள்ளிட்டவற்றைப் பராமரிக்கத் தேவையில்லை எனவும் பாடக்குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையைக் குறைக்கவும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்படத் தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என மானியக் கோரிக்கையின் போது தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், கருவூல பதிவேடு, சம்பள பிடித்த பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாகக் கணினியில் மட்டும் பராமரித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்கத் தேவையில்லை. அதுபோல் 4 முதல் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in