மதுரை சிறையில் இருந்து கடலூருக்கு நள்ளிரவில் மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்: அதிர வைக்கும் பின்னணி

மதுரை சிறையில் இருந்து கடலூருக்கு நள்ளிரவில் மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்: அதிர வைக்கும் பின்னணி

நீதித்துறையை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து திடீரென கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணை செய்து வந்த நிலையில், சவுக்கு சங்கரின் கருத்துக்களை நீதிமன்றம் கேட்டறிந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மதுரை மத்தியச் சிறையிலிருந்து கடலூர் மத்தியச் சிறைக்குச் சவுக்கு சங்கர் நள்ளிரவில் மாற்றப்பட்டுள்ளார். அச்சுறுத்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காகச் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in