இனி ஓலைப்பெட்டிகளில் லட்டு -சுற்றுச்சூழல் காக்க திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு

ஓலைப் பெட்டிகள்
ஓலைப் பெட்டிகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  பக்தர்கள் வாங்கி செல்லும் லட்டை கொண்டு செல்வதற்காக சிறிய அளவிலான ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் வாங்கிச் செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கிச்செல்ல ஏதுவாக தேவஸ்தான நிர்வாகம் சார்பில்  பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவை பக்தர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இனிமேல் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை மற்றும் தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. 

ரூ. 10, ரூ.15 மற்றும் ரூ.20 ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலைப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பக்தர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப ஓலைப் பெட்டிகளை வாங்கிக் கொள்ளலாம்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in