திருந்தி வாழ்ந்த ரவுடி கொடூரமாக கொலை: வேலை முடிந்து வீடு திரும்பியபோது கும்பல் வெறிச்செயல்

திருந்தி வாழ்ந்த ரவுடி கொடூரமாக கொலை: வேலை முடிந்து வீடு திரும்பியபோது கும்பல் வெறிச்செயல்

சென்னையில் திருந்தி வாழ்ந்த ரவுடியை கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு 5-வது தெருவை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்ற ஆதி சுரேஷ்(45). இவருக்கு திருமணமாகி ஜோதி(40) என்ற மனைவியும், புருஷோத்தமன், கீர்த்தனா என்ற பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் மீது பல வழக்குகள் உள்ள நிலையில், தற்போது அவர் திருந்தி வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாசாலையில் கூலி வேலை செய்து வந்த சுரேஷ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புளியந்தோப்பு மார்த்தம்மன் கோயில் தெரு வழியாக வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சரமாரி அரிவாளால் வெட்டியது. இதில் சுரேஷ் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீஸார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலை வழக்கு தொடர்பாக அஜித், முரளி ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in