பக்கத்து வீட்டிற்கு சென்று திரும்புவதற்குள் வீடு புகுந்து கொள்ளை: அச்சத்தில் மக்கள்

.கொள்ளை
.கொள்ளை பக்கத்து வீட்டிற்கு சென்று திரும்புவதற்குள் வீடு புகுந்து கொள்ளை: அச்சத்தில் தென்மாவட்ட மக்கள்

தென் மாவட்டங்களில் பட்டப் பகலிலேயே வீடு புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக அரங்கேறி வருகின்றது. தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை பகுதியில் மீனவர் ஒருவர் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பினார். அதற்குள் அவரது வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் திருநெல்வேலியில் ஒரு பெண் பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் ஒரு மணிநேர இடைவெளியை பயன்படுத்தி மர்மநபர்கள் அவரது வீட்டில் நேற்று மாலையில் கொள்ளையடித்துள்ளனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள கோவைகுளம், வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. விவசாயியாக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. சுப்பையா வழக்கம் போல் விவசாய வேலைகளில் ஈடுபட தன் வயலுக்குச் சென்று இருந்தார். இவரது மனைவி தன் வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டுப் போட்டு பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் போய் பேசச் சென்று இருந்தார். ஆனால் அவர் பின்பக்க கதவை தாழ்ப்பால் போட்டுப் பூட்ட மறந்துவிட்டார்.

பக்கத்து வீட்டில் இருந்து பேசி முடித்து திரும்பியவர், வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே வந்தவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த வளையல், கம்மல் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகளும், வீட்டில் இருந்த 5000 ரூபாய் மதிப்புள்ள செல்போனும் திருடு போயிருந்தது. உடனே இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

சுப்பையா வயலுக்குச் சென்று இருப்பதையும், கிருஷ்ணவேணி பக்கத்து வீட்டிற்கு பேசச் சென்று இருப்பதையும் நோட்டமிட்டு உள்ளூர் கொள்ளையர்கள் யாரேனும் கைவரிசைக் காட்டியிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் நேற்று இதேபோல் திருச்செந்தூர் மீனவர் வீட்டிலும் மருத்துவமனைக்கு சென்ற இரண்டு மணிநேர இடைவெளியைப் பயன்படுத்தி 45 பவுன் கொள்ளை போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in