காஞ்சிபுரம் அருகே கோரம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நேர்ந்த துயரம்!

காஞ்சிபுரம் அருகே நடந்த கார் விபத்து
காஞ்சிபுரம் அருகே நடந்த கார் விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் சித்தேடு அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், 6 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள செ.நாச்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் சென்னையில் உள்ள தனது மாமனார் வீட்டில் இருந்து, மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர உறவினர் ஒருவரின் ஆம்னி காரில் சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து மனைவி ரத்னா மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இன்று காலை காரில் வந்து கொண்டிருந்த போது, சென்னை- பெங்களூர் விரைவு சாலையில் சித்தேடு மேடு என்ற இடத்தில் பழுதாகி நின்ற லாரி ஒன்றின் மீது கார் பலமாக மோதியது.

இதில் ராமஜெயத்தின் மனைவி ரத்னா, குழந்தைகள் ராஜலெட்சுமி, தேஜஸ்வி, உறவினர் விக்னேஷ், 6 மாத கைக்குழந்தை ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் காயங்களுடன் உயிருக்கு போராடிய ராமஜெயத்தை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் பலியான சம்பவம் நாச்சிபட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in