இரவில் தூங்க சென்றவர் காலையில் சடலமாக கிடந்தார்: 2 காரணங்களால் விபரீத முடிவெடுத்த அரசு அதிகாரி

இரவில் தூங்க சென்றவர் காலையில் சடலமாக கிடந்தார்: 2 காரணங்களால் விபரீத முடிவெடுத்த அரசு அதிகாரி

வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பட்டாபிராமில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டாபிராம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(43). இவர் சேப்பாக்கம் மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி தேவி(36) என்ற மனைவியும், தமிழரசி(11), தமிழ்செல்வன்(10) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அருண்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருபுறம் பணியில் பதவி உயர்வு கிடைக்காததாலும், மற்றொரு புறம் கடன் தொல்லையாலும் அருண்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

நேற்று இரவு குடும்பத்துடன் உணவு அருந்தி விட்டு தூங்க சென்ற அருண்குமார் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி தேவி கதவை திறந்து பார்த்த போது மின்விசிறியில் அருண்குமார் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு மனைவி தேவி தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அருண்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in