மனநலம் பாதித்த மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தைக்கு வாழ்நாள்  சிறை
தந்தைக்கு வாழ்நாள் சிறைமனநலம் பாதித்த மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடுமலையில் மனநலம் பாதித்த மகளைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் 59 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019 டிச.2-ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) தவறாக நடக்க முயன்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, தான் படிக்கும் பள்ளி ஆசிரியையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீஸார் போக்சோ வழக்கு பதிந்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி டி.பாலு இன்று தீர்ப்பு அளித்தார்.

அதில், மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் வரை சிறைத்தண்டனை விதித்து, ரூ.5 ஆயிரம் அபராதம் வழங்கவும் உத்தரவிட்டார். சிறுமியின் மறுவாழ்வுக்காக ரூ.2.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜாரானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in