இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் - தயார் நிலையில் 2,048 வீரர்கள்: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் - தயார் நிலையில் 2,048 வீரர்கள்: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கனமழை காரணமாகச் சென்னை மாவட்டத்தில் இருவரும், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 25 கால்நடை இறப்புகள் பதிவாகி உள்ளது. 140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 4-ம் தேதி முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் 250 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வருகிற 9-ம் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் ஆயிரத்து 149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையில் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in