சோழர் காலத்து சிவகாமி அம்மன் உலோக சிலை மீட்பு: தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து போலீஸ் அதிரடி

சோழர் காலத்து சிவகாமி அம்மன் உலோக சிலை மீட்பு: தஞ்சாவூரில் வீட்டில் புகுந்து போலீஸ் அதிரடி

தஞ்சாவூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சோழர் காலத்து சிவகாமி அம்மன் உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சுவாமி மலையில் உள்ள ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான சிலை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சுமார் 6 அடி உயரம் கொண்ட சிவகாமி அம்மன் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக தமிழகத்தில் ஐந்து அடிக்கு மேல் உயரம் கொண்ட உலோக சிலையை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்பதாலும், கண்டறியப்பட்ட உலோக சிலை தொன்மையான சிலை என்பதாலும் போலீஸார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சிலைக்குண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததும் பறிமுதல் செய்யப்பட்ட சிவகாமி அம்மன் சிலை பிற்கால சோழர் காலத்து சேர்ந்தவை என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சிலை தமிழகத்திலிருந்து எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in