அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஅடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், நெல்லை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தருமபுரி, கரூர், பெரம்பலூர், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in