7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேன்டூஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய தாலுகாக்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் தாலுகாவுக்கும் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டு இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in