பராமரிப்பால் ரயில்வே கேட் மூடல்; ரயில் சேவையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் அவதி!

பராமரிப்பால் ரயில்வே கேட் மூடல்; ரயில் சேவையில் மாற்றமில்லை: வாகன ஓட்டிகள் அவதி!

நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிக்காக அனைத்து ரயில்வே கேட்களும் இன்று நாள் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் இன்று நடந்து வருகிறது. இந்தப் பணிகள் நடப்பதால் இந்த வழித்தடத்தில் வரும் ரயில்வே பாதைகள் அனைத்தும் இன்று நாள் முழுவதும் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்- கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் காக்கமூர்-சுசீந்திரம், பறக்கை-வடக்குத் தாமரைக்குளம், வடக்குதாமரைக்குளம்-சுவாமிதோப்பு ஆகிய மூன்று ரயில்வே கேட்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக இந்த மூன்று ரயில்வே கேட்களும் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த கேட்கள் முற்றிலும் மூடப்பட்டன.

இந்த வழியாக வந்தவர்கள் மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றனர். இந்த ரயில்வே வழித்தடங்களில் சோதனை, பராமரிப்புப் பணிகள் நடந்தன. காக்கமூர்-சுசீந்திரம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்திக்கு அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் காக்கமூரிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றனர். ரயில் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக கேட் மூடப்பட்டாலும், ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

x
காமதேனு
kamadenu.hindutamil.in