1 முதல் 5-ம் வகுப்புக்கு அக்.12 வரை காலாண்டு விடுமுறை

1 முதல் 5-ம் வகுப்புக்கு அக்.12 வரை காலாண்டு விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 5-.ம் வகுப்பு வரை அக்.12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும், எழுத்தும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக். 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடப்பதற்காக இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in